புகைப்பட உதவி @BCCI

 

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது.

 

ஆனால் 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

இந்த நிலையில், போட்டிக்குப்பின்னர் வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களை இந்திய அணியினர் அழைத்தனர். 2 அணியினரும் கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BY MANJULA | JUN 15, 2018 7:53 PM #INDVSAFG #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS