சென்னையில் உள்ள கடைகள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர் முக்கிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சென்னை தி.நகர், பாரிமுனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

வரி ஏய்ப்புப் புகார் மற்றும் ஜவுளிக் கடைகளின் மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது போன்ற புகார்களின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BY MANJULA | JUN 8, 2018 2:49 PM #ITRAID #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS