Looks like you've blocked notifications!

முறையான வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான, நவ்ஜோத் சிங் சித்து-வின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது வருமான வரித்துறை.

 

நவ்ஜோத் சிங் சித்து ரூ.52 லட்சம் வருமானவரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதனை செலுத்துமாறும் வருமான வரித்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால், நவ்ஜோத் இந்த வருமான வரித் தொகையை செலுத்த தவறியதையடுத்து வருமான வரித்துறை அவருடைய இரண்டு வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

 

நவ்ஜோத் சிங் சித்து, முன்னதாக பாரதீய ஜனதா கட்சியிலும், தற்போது காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | MAR 30, 2018 6:11 PM #NAVJOTSINGHSIDHU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS