மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்-இஷான் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தடக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.ஜான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரைக் காண, பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்த நிலையில் நடிகரும்,ஜான்வியின் அண்ணனுமான அர்ஜுன் கபூர் எழுதியுள்ள கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.'தடக்' படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி அர்ஜுன் இக்கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

 

நாளை நீ பார்வையாளர்களில் ஒருவராக இருப்பாய்.ஏனெனில் உனது படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. முதலில் நாளை நான் மும்பையில் இருக்க மாட்டேன் என்பதற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.ஆனால் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன், கவலைப்படாதே.

 

சினிமா குறித்து நீ தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். கடுமையாக உழை,நேர்மையாக இரு.உனது ஸ்டைலைப் பின்பற்று,உன்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதனைக் கேட்டு நட. 'தடக்' படத்திற்கு வாழ்த்துக்கள். நீயும்,இஷானும் இணைந்து நவீன ரோமியோ-ஜூலியட்டை உருவாக்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

 

இவ்வாறு அர்ஜுன் தனது தங்கை ஜான்வியிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இக்கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS