Looks like you've blocked notifications!

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் காரணமாக, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் நாளை புனேவில் நடைபெறவிருக்கும் போட்டிகளை நேரில் காண்பதற்காக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு உள்ளனர்.

 

இதனையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்!

 

உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS