Looks like you've blocked notifications!

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, தனக்கு ஒருபோதும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருந்தது இல்லை என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் , "என்னை ஐபிஎல் போட்டி தொடரில் விளையாட அழைத்தாலும், நான் செல்லமாட்டேன். ஐபிஎல் போட்டியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பெரிதாக உருவெடுக்கும்.

 

பிஎஸ்எல் போட்டிகளில் விளையாட மட்டுமே எனக்கு விருப்பம் இருக்கிறது. எனக்கு ஐபிஎல் போட்டி தொடரில் விளையாட ஒருபோதும் ஆர்வம் இருந்தது கிடையாது," என கூறியிருக்கிறார்.

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரில், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | APR 6, 2018 4:29 PM #IPL2018 #SHAHIDAFRIDI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS