Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் வேளையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும்  போட்டி நடைபெறக் கூடாது என அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாகப்பாம்புகளை மைதானத்தில் விடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

அப்போது பேசிய வேல்முருகன், "தண்ணீர் பாட்டில், கைக்குட்டை, பேனா ஆகியவை மைதானத்திற்கு எடுத்து செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மலையில் இருக்கும் நல்லபாம்புகளை மைதானத்திற்குள் விடப் போகிறார்கள்.

 

அந்த பாம்புகளைப் பிடிக்க விளையாட்டு வீர்ர்களும், போலீசாரும் ஐபிஎல் விளையாட போகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்க போகிறோம்”, என தெரிவித்தார்.

BY SATHEESH | APR 10, 2018 12:58 PM #CAUVERYMANAGEMENTBOARD #VELMURUGAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS