தடகள வீரர்கள் தங்களது வருமானத்தில் 33% சதவிகிதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணத்தை மாநிலத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு மாநிலத்தில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் விஜ், ''தடகள வீரர்களுக்கு வேறு எந்த மாநிலமும் செய்யாத அளவில் அதிகபட்ச பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி வருவதால் இந்த நடவடிக்கை தேவையாகிறது,'' என இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 8, 2018 3:38 PM #HARYANA #SPORTS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS