மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

 

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி+கோப்பை என்ற இலக்குடன், களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

 

3-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணி ரசிகர்கள், பிரபலங்களின் வாழ்த்து மழையில் தொடர்ந்து நனைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை அணியை வாழ்த்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

 

தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி.சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS