Aan Devadhai BNS Banner

'உனது மனைவி-மகனைக் கொன்றுவிட்டேன்'.. புதிய தகவல்கள் உள்ளே!

Home > தமிழ் news
By |
'உனது மனைவி-மகனைக் கொன்றுவிட்டேன்'.. புதிய தகவல்கள் உள்ளே!

டெல்லி மாவட்ட கூடுதல் நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மாவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை பட்டப்பகலில் அவரது பாதுகாவலர் மஹிபால் நடுரோட்டில் வைத்து, துப்பாக்கியால் நேற்று கொலை செய்தார். இதில் அவரது மனைவி இறந்துவிட மகன் தற்போது ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இந்தநிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த படுகொலையில்  புதிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி நீதிபதி கிருஷ்ணகாந்த் பொதுவெளியில் மஹிபாலை திட்டுவாராம். மேலும் கடந்த வாரம் விடுமுறை கேட்டபோது நீதிபதி, மஹிபாலுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்றும் இதனால் மஹிபால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும்  கூறப்படுகிறது.

 

மேலும் கொலை செய்தவுடன் உனது மனைவி,மகனை துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் சென்று பார் என மஹிபால், கிருஷ்ணகாந்த்க்கு போன் செய்து தெரிவித்து இருக்கிறார். இந்தத்தகவலை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.இதில் உச்சகட்டமாக கைது செய்ய சென்ற காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் மஹிபால் சுட்டிருக்கிறார். எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தற்போது மஹிபாலிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MURDER, DELHI