Looks like you've blocked notifications!

விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த தன் காதலனை, பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார் பெண் ஒருவர்.

 

உதகமண்டலம் மசினக்குடியை சேர்ந்த ஷில்பாவும் (18), வேலூரைச் சேர்ந்த விஜய்யும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

 

இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், முதலில் எதிர்ப்பும் பின்பு திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

 

ஆனால் ஒருநாள், ரயிலில் பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் தவறி விழுந்துள்ளார்.

 

இதில், படுகாயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தாலும், இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வலது கால் செயலிழந்துள்ளது.

 

இரண்டு கால்களும் இழந்த விஜய்யின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட ஷில்பாவின் பெற்றோர், மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

 

ஆனால், இரண்டு கால்களை தன் காதலன் இழந்தாலும் அவரை மணக்க உறுதியாக இருந்த ஷில்பா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விஜய்யை இன்று திருமணம் செய்துள்ளார்.

BY SATHEESH | MAR 31, 2018 8:12 PM #GIRLMARRIEDHANDICAPPEDLOVER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS