குதிரை தூக்கி வீசியதில் இளவரசர் பலியான சம்பவம் ஜெர்மனில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ்(41) இங்கிலாந்து பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார்.

 

இதனால் தனது மனைவியுடன் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார்.இந்தநிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.

 

பந்தயத்தின் போது குதிரை வேகமாக தூக்கி வீசியதில் இளவரசர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளவரசர் இறந்த தகவலை ஜெர்மன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது. 

BY MANJULA | JUN 15, 2018 1:04 PM #GERMAN #HORSE #PRINCE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS