இந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை

Home > தமிழ் news
By |
இந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை

நேற்று முன்தினம் கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.

 

இதேபோல நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

GAJACYCLONE, PUDUKKOTTAI