கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் மங்களூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அதில், கல்லூரி செல்லும் 18 முதல் 23 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்றும், பெங்களூரு நகருக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் வகையில் காவிரி-ஐந்தாம் கட்ட திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS