Looks like you've blocked notifications!

இறக்கும் தருவாயிலுள்ள கணவனுக்காக, தன் வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து பிரசவித்துள்ளார் பெண்மணி ஒருவர்.

 

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மார்க் ஆல்கர், இன்னும் ஒரு வாரத்தில் இறந்து விடுவார் என மருத்துவர்கள், அவருடைய மனைவி தியேன்-னிடம் தெரிவித்துள்ளனர்.

 

அந்த சமயத்தில், தன் ஐந்தாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த தியேன், அந்த குழந்தையை எப்படியாவது தன் கணவர் இறக்கும் முன் அவரிடம் காண்பித்து விட முடிவெடுத்துள்ளார்.

 

இதனையடுத்து, தன் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த படுக்கையின் அருகியிலேயே மருத்துவர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தியேன், குழந்தையை மார்க் கையில் கொடுத்துள்ளார்.

 

குழந்தையை கையில் வாங்கியபோது, "நான் தான் உன் தந்தை", எனக் கூறிய மார்க், அடுத்த 45 நிமிடங்களில் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

 

தொடர்ந்து, அடுத்த இரண்டு நாள்களிலேயே மார்க் உடலில் இருந்து உயிர் பிரிந்துள்ளது.

BY SATHEESH | MAR 30, 2018 5:46 PM #CHILDBORN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS