400 கி.மீ பாத யாத்திரை சென்று நெகிழவைத்த நாய்!

Home > தமிழ் news
By |
400 கி.மீ பாத யாத்திரை சென்று நெகிழவைத்த நாய்!

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்ய விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் என்பவரும் அவருடன் சுமார் 30  நபர்களும் பாத யாத்திரையாக பயணம் செய்யத் தொடங்கினர்.  

 

அவர்கள் செல்லும் வழியில் திங்கள் அன்று புதுச்சேரியை கடக்கும்போது அவ்வழியே ஒரு நாய் ஒன்று இந்த குழுவினருடன் இணைந்து நடக்கத் தொடங்கியுள்ளது.  பாதயாத்திரை சென்ற பக்தர்கள் விரட்டியும் செல்லாமல் அவர்களுடனே அந்த நாய் நடக்கத் தொடங்கியுள்ளது.

 

இதை பார்த்த பக்தர்களும் நாயின் கழுத்தில் பக்தர்களுக்கான துணியை கட்டி, தங்களுடன் கூட்டி செல்ல துவங்கினர். ஏறக்குறைய 400 கிலோ மீட்டர் பாத யாத்திரை சென்ற திருமலை பக்தர்களுடன் பயணித்த நாயை பார்த்து பலரும் நெகிழ்ந்துள்ளனர்.

TIRUPATHI PILGRIMAGE, DOGSTORY