கொல்கத்தாவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர் கூறுகையில், "ரிஷப் பண்டின் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்திய அணியில் ரிஷப்புக்கு உரிய இடம் கிடைக்கும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். இந்திய அணியின் எதிர்காலமாக ரிஷப் திகழப்போகிறார்.

 

அதேபோல மற்றொரு இளம் வீரர் இஷான் கிஷானின் பேட்டிங்கும் நன்றாக உள்ளது. இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. தற்போதைய நிலையில் தோனி என்ற வலிமையான வீரர் இந்திய அணியில் இருக்கிறார்.

 

அவரின் இடத்தை நிரப்புவது மிகக்கடினம். எனினும் தோனிக்கு அடுத்த சிறந்த வீரர் என்று தினேஷ் கார்த்திக்கைக் கூறலாம். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான அவரது ஆட்டத்தை மறக்க முடியாது. என்னைப்பொறுத்தவரையில் தினேஷ் மிகச்சிறந்த வீரர்,'' இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS