Looks like you've blocked notifications!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர், ஆகியோருக்கு விளையாட  ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத டேவிட் வார்னர், தற்போது இந்த விவகாரம் குறித்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், "நான் இப்போது சிட்னி திரும்பி கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டை பாதித்த தவறுகள் நடந்து விட்டன. நான் என்னுடைய தவறுகளுக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

விளையாட்டுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்ட துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் என் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம்பிக்கையான ஆலோசகர்களுடன் நேரம் செலவிடப்போகிறேன்", என வார்னர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS