கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மெழுகுச்சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்படவுள்ளது என்றும்,ரசிகர்கள் தனது சிலையுடன் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

பதிலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், "நாம் உண்மையிலேயே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என்று கிண்டல் செய்துள்ளார். வார்னரின் இந்த கமெண்டிற்கு விராட் இன்னும் பதிலளிக்கவில்லை.

 

சச்சின் டெண்டுல்கர்,கபில் தேவ்,லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் சிலைகளுக்கு அடுத்து,விராட் கோலியின் சிலை துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS