Looks like you've blocked notifications!

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

சென்னை கேப்டன் தோனி கொல்கத்தாவுக்கு எதிரான இப்போட்டியில், டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

 

இதுவரை நடைபெற்ற 4 ஐபிஎல் போட்டிகளிலும் 2-வதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த செண்டிமெண்ட் இன்றைய போட்டியில் தோனிக்குக் கைகொடுக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். அப்போட்டியில் போராடி சென்னை அணி வெற்றிவாகை சூடியது.

 

இதனால் 'பவுலிங்' செண்டிமெண்ட் இந்த போட்டியிலும் தோனிக்குக் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS