Looks like you've blocked notifications!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸியிடம் கேள்வி எழுப்பப்ட்டது.

 

அதற்கு பதிலளித்த மைக்கேல் ஹஸ்ஸி, நாளை நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ தான் முடிவு செய்வார், என தெரிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS