மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை ஒன்று, காயங்கள் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளது.

 

இதுகுறித்து அங்குள்ள வன அலுவலர் ஒருவர் கூறுகையில், " திங்கட்கிழமை காலை கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தை அடித்துக் கொன்றது.இதனைக் கண்ட பசுக்கள் கூட்டமாக சேர்ந்து சிறுத்தையை விரட்டி தாக்கியுள்ளன. இதில் ஒரு பசு சிறுத்தையை தனது கொம்பால் குத்தி தூக்கி வீசியுள்ளது. இதனால் சிறுத்தையின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

தொடர்ந்து அங்குள்ள சிறுத்தை மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுத்தை இறந்தது. பசு தூக்கி வீசியதில் சிறுத்தையின் முதுகெலும்பு முறிந்ததோடு, உள்காயமும் அதிகளவில் ஏற்பட்டதால் சிறுத்தை இறந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | JUL 14, 2018 11:30 AM #MUMBAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS