ரெயில் 'வைஃபையில்' படித்து அரசுத்தேர்வில் வெற்றிபெற்ற 'கூலித்தொழிலாளி'

ரெயில்வே நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் படித்து, கூலித்தொழிலாளி ஒருவர் அரசுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் ஸ்ரீநாத். 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் மூட்டை தூக்கிக்கொண்டே அரசுத்தேர்வுகளுக்குப் படித்து வந்தார்.

 

அரசுப்பணிகளுக்காக கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை மூன்று முறை எழுதி அதில் தோல்வியடைந்த ஸ்ரீநாத், விடாமுயற்சி செய்து 4-வது முறையாக அதில் வெற்றி பெற்றுள்ளார். 

 

இதுகுறித்து அவர், " ரெயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை பயன்படுத்தி படித்தேன். மூட்டை தூக்கும்போது பாடங்களை ஹெட்போனில் போட்டு கேட்பேன். என்னுடைய முழுக்கவனமும் அதில் தான் இருக்கும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAY 9, 2018 11:18 AM #RAILWAY #KERALA #WIFI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS