திருமணத்திற்காக தனது பெற்றோர் பார்த்த  மாப்பிள்ளை பிடிக்காததால், ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா(27) என்ற பெண் சென்னையில் உள்ள ஐடி நிறுவனமொன்றில் வேலை செய்துவந்தார். இந்த   நிலையில் நேற்று வேலைநேரம் முடிந்தபின் தனது அலுவலகத்தின் 9-வது மடியில்  இருந்து அவர் கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

கடந்த வாரம் பிரியங்காவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாகவும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால்  பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS