புனே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் கடைசி லீக் போட்டியில், முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை எடுத்தது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக லுங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில்  159 ரன்களை அடித்து இலக்கை எட்டியது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா 61 ரன்களும், தீபக் சாகர் 39 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், அங்கித் ராஜ்பூத் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 

இந்தநிலையில் அஸ்வினின் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததால், 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ரஹானேவின் ராஜஸ்தான் அணி.

 

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் இதுதான்:-

 

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18
2. சென்னை சூப்பர் கிங்ஸ்   18
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16
4. ராஜஸ்தான் ராயல்ஸ்    14

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS