புகைப்பட உதவி @IPL

 

மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப்போட்டியில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

 

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர்.சென்னை அணியில் கரண் சர்மா, ஷர்துல், பிராவோ, நிகிடி, ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி+கோப்பை என்ற இலக்குடன், சென்னை அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS