புகைப்பட உதவி Twitter/IPL

 

டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து  162 ரன்கள் எடுத்தது.

 

டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களும், விஜய் சங்கர் 36 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் லுங்கி நிகிடி சிக்கனமாகப் பந்துவீசி 3 ஓவர்களுக்கு வெறும் 14 ரன்களை  மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

அதே நேரம் 4 ஓவர்கள் பந்துவீசிய பிராவோ விக்கெட் எதுவும் எடுக்காமல், 52 ரன்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS