புகைப்பட உதவி Twitter/IPL

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது பிளே-ஆஃப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.

 

ஹைதராபாத் அணியின் ஷிகர் தவான்(0) ரன் எதுவும் எடுக்காமல் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் கேப்டன் வில்லியம்சன் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார்.

 

ஆனால் சென்னை பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கோஸ்வாமி (12),வில்லியம்சன்(24), மணீஷ் பாண்டே (8), பதான்(24), ஷாகிப்(12) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

 

எனினும் கடைசி நேரத்தில் பிரத்வெயிட்டின் (43) அதிரடியால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 25 ரன்களை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS