புகைப்பட உதவி Twitter/IPL

 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது பிளே-ஆஃப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அம்பாதி ராயுடு(0), வாட்சன்(௦) ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினர். ஓரளவு நன்றாக ஆடிய ரெய்னாவும்(22) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து தோனி(9), பிராவோ(7), ஜடேஜா(3), ஹர்பஜன்சிங்(1) என அடுத்தடுத்து சென்னை விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

 

எனினும் தனி ஒருவனாகப் போராடிய பாப் டூ பிளசிஸ்(67) ரன்களைக் குவித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இதனால் 19.1 ஓவரில் 140 ரன்களை எடுத்து, சென்னை அணி மீண்டும் ஒரு 'திரில்' வெற்றியைப் பதிவு செய்தது.

 

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS