Looks like you've blocked notifications!

வடபழனியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபர் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக, போலீசார் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

துரைசாமி சுரங்கப்பாதை பகுதியில் வந்தபோது அவரை நிறுத்திய போலீஸார், தலைக்கவசம் அணியாதது குறித்தும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது குறித்தும் விசாரித்துள்ளனர்.

 

இதனால் ஏற்பட்ட  வாய் தகராறு முற்றிய நிலையில், பிரகாஷை போலீஸார் கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர்.

 

அந்த இளைஞனின் தாயும் சகோதரியும் அந்த இடத்தில் இருக்கும்போதே, போலீசார் இளைஞனின்  கையை முறுக்கி அடித்துள்ளனர்.

 

பிரகாஷ் மீது தற்போது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS