96 BNS Banner
Ratsasan BNS Banner

'பிறந்தநாளில் காதலியை' சுட்டுக்கொலை செய்து.. தானும் தற்கொலை!

Home > தமிழ் news
By |
'பிறந்தநாளில் காதலியை' சுட்டுக்கொலை செய்து.. தானும் தற்கொலை!

காதலியின் பிறந்தநாளில் அவரை சுட்டுக்கொலை செய்து, காவலர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண் முதுநிலை மருத்துவம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்னும் காவலரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

 

இன்று சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் கார்த்திகேயன் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்று இருந்தார். நேற்றிரவு 12 மணியளவில் சரஸ்வதி பிறந்தநாளை கொண்டாடியபோது, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாலை 2 மணிவரையில் இந்த வாக்குவாதம் நீடித்தது.

 

இதில் கோபமடைந்த கார்த்திகேயன் காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து,தானும் தற்கொலை செய்து கொண்டார்.சத்தம் கேட்டு வந்த சரஸ்வதியின் தந்தை சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

 

பின்னர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கஞ்சனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

POLICE, SUICIDE