சென்னை மெட்ரோ ரெயில்களில் இன்றும்(ஜூன்29) இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை சென்ட்ரல்-மீனம்பாக்கம், டிஎம்எஸ்-சின்னமலை இடையிலான மெட்ரோ சேவை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதனையொட்டி பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இலவச பயண திட்டத்தினை ரெயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.

 

அதன்படி சென்ட்ரல்-விமானநிலையம், டிஎம்எஸ்-விமானநிலையம் ஆகிய இரு வழித்தடங்களிலும், கடந்த 4 நாட்களாக மக்கள் இலவச பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் 5-வது நாளான இன்றும் இந்த இரு வழித்தடங்களிலும் இலவச பயணத்தினை மேற்கொள்ளலாம் என, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS