Looks like you've blocked notifications!

சென்னையைச் சேர்ந்த ஜீவா, செகந்திராபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் ரயிலில் சென்னை திரும்பியுள்ளார். 

 

அப்போது, திருமணத்தின் போது அணிவதற்காக எடுத்து சென்ற சுமார் 14 இலட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை, கவிதா ஒரு பையில் போட்டு தன்னிடம் வைத்துள்ளார்.

 

நள்ளிரவில் எல்லோரும் சற்று கண் அயர்ந்த நேரத்தில், அங்கு வந்த கொள்ளையர்கள் அவருடைய நகை பையை தூக்கி சென்றுள்ளனர்.

 

ரயில் ஆந்திர மாநிலம் கூடூர் வந்தபோது, விழித்த கவிதா தன் நகைப்பை காணாமல் போனது கண்டு பதறிபோய், பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

 

ஆனால், எங்கு தேடியும் நகை கிடைக்காததால் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

BY SATHEESH | APR 4, 2018 9:58 AM #THEFT #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS