Looks like you've blocked notifications!

சென்னையில் இளம்பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில், அவரது கணவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

 

வீட்டின் உரிமையாளர் தான் வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் பக்கம் அதிகாலை வந்தபோது, அந்த வீட்டில் தங்கியிருந்த ஞானப்பிரியா (24) கயிறால் கட்டப்பட்ட நிலையில், கொலைசெய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த நிலையில் கிடந்தார்.

 

மேலும் அவருடைய கணவர் பிரபு (27), துணியால் கட்டப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து,  பிரபு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

போலீசார் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BY SATHEESH | APR 5, 2018 4:21 PM #MURDER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS