தெலுங்கானா மாநிலம் நாகர்கர்நூல் மாவட்டம் அச்சம்பட்டு டவுனைச் சேர்ந்த கொண்டி நிரஞ்சனம்மா-லட்சுமி இருவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடைபெறும்போது மணமகள் லட்சுமி திடீரென சரிந்து மணமகனின் காலில் விழுந்தார்.

 

இதைத்தொடர்ந்து லட்சுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு லட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அறிவித்தனர்.

 

திருமண விழாவில் மணமகள் திடீரென இறந்துபோன சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | JUL 8, 2018 12:48 PM #WEDDING #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS