வெலகிப் போறவங்ககிட்ட 'பின்னால' போய் தொங்க முடியாது

Home > தமிழ் news
By |
வெலகிப் போறவங்ககிட்ட 'பின்னால' போய் தொங்க முடியாது

இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் கடந்த சீசனில் டைட்டில் வென்ற ஆரவ் வீட்டிற்குள் வருவது போல காட்சிகள் உள்ளன. தொடர்ந்து நேரடியாக பைனல் செல்வதற்கான டாஸ்க்குகளையும் ஆரவ் படித்துக் காட்டுகிறார்.

 

இந்தநிலையில் நீங்க ஏன் ஆரவ் கிட்ட ஒழுங்கா பேசறது இல்ல என சுஜா, சிநேகனிடம் கேட்க பதிலுக்கு சினேகன் வெலகிப் போறவங்ககிட்ட 'பின்னால' போய் என்னால தொங்க முடியாது. நானா ஒண்ணும் வெலகிப்போகல என பதிலளிக்கிறார்.

 

இதனை வைத்துப்பார்க்கும் போது ஆரவ்-சிநேகன் இடையில் ஏதேனும் மனக்கசப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என யூகம் செய்ய முடிகிறது. அதே நேரம் அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை, இன்றைய நிகழ்ச்சியின் வழியாக  தெரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.