பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மமதி சாரி, ஆனந்த் வைத்யநாதன் என 2 பேர் மக்கள் வாக்குகள் காரணமாக வெளியேறியுள்ளனர்.இந்தநிலையில் 3-வது போட்டியாளராக இந்த வீட்டை விட்டு செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

 

கடந்த வாரம் சக போட்டியாளர்களால் நித்யா, பாலாஜி, பொன்னம்பலம்,யாஷிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் பொன்னம்பலம் மக்களால் காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார். இதனால் பாலாஜி,நித்யா, யாஷிகா மூவரில் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஆன்லைன் வாக்கெடுப்புகளில் யாஷிகா வெளியேற வேண்டும் என்றே பெரும்பாலோனோர் வாக்களித்தனர். இந்தநிலையில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக இன்று கமல் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து யாஷிகா வெளியேறுவார் என்றே பெரும்பாலோனோர் நினைக்க, அதற்கு பதிலாக நித்யா வெளியேறியதாக கமல் அறிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS