ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா

Home > தமிழ் news
By |
ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், கமல் தனது கையில் இருந்து ரெட் கார்டை எடுத்துக் காட்டுகிறார். இதன் மூலம் முதன்முறையாக ரெட் கார்டு வழியாக ஒருவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ஐஸ்-யாஷிகா இருவரும் கண்ணீர் விட்டுக் கதறியழுகின்றனர். மறுபுறம் பாலாஜி-மஹத்திற்கு அறிவுரை வழங்குகிறார்.

 

தொடர்ந்து சென்றாயன் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு  வெளியேவர அருகில் நிற்கும் மும்தாஜ், டேனி, விஜயலட்சுமி, ஜனனி ஆகியோர் அமைதியாக பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.சென்றாயன் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் மும்தாஜ்,டேனி கண்டிப்பாக அவரை வழியனுப்பி வைக்க வந்திருப்பார்கள்.

 

அதேபோல சென்றாயன் வெளியேற்றத்திற்கு ஐஸ்-யாஷிகா இருவரும் இப்படிக் கதறியழ மாட்டார்கள் என்பதால், வீட்டைவிட்டு மஹத் வெளியேறியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.