'பிக்பாஸ்' வீட்டைவிட்டு 'வெளியேறியது' இவர்தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மமதி சாரி, ஆனந்த் வைத்யநாதன்,நித்யா  என 3  பேர் மக்கள் வாக்குகள் காரணமாக வெளியேறியுள்ளனர்.இந்தநிலையில் 4-வது போட்டியாளராக இந்த வீட்டை விட்டு வெளியில் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

 

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களால் ரம்யா, தாடி பாலாஜி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆன்லைன் வாக்கெடுப்புகளில் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்றே, பெரும்பாலோனோர் வாக்களித்தனர்.

 

இதனால் ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் பாலாஜி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா,ஜனனி ஆகியோர்  காப்பாற்றப்பட்டதாக தெரிவித்த கமல், பாடகி ரம்யா  பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக அறிவித்தார்.