2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை ட்ரேட் சென்டரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இதில் கடந்த 15 வருடங்களாக பாக்ஸ் ஆபிஸின் ராணியாகத் திகழும் நயன்தாராவுக்கு, 'தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் கோல்டு லேடி' விருது நடிகை ரம்யா கிருஷ்ணன் கையால் வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசுகையில், "ரசிகர்களின் அன்புக்கு நன்றி. என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இருந்ததால் தான் இத்தனை வருடம் என்னால் இவ்வளவு படங்கள் பண்ண முடிந்தது,'' என்றார்.

 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விக்னேஷ் சிவனுடன், நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் போட்டு காட்டப்பட்டது. அதன் பிறகு செல்பி எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமா? எனக் கேட்க, பதிலுக்கு நயன், "நான் எங்க எடுத்தேன். அவரு தான எடுத்தாரு அவர்கிட்ட கேளுங்க,'' என விக்னேஷ் சிவனை கோர்த்து விட்டார். நயனின் இந்த ஜாலியான பதிலைக்கேட்ட ரசிகர்கள் கைத்தட்டி வெகுவாக ஆரவாரம் செய்தனர். 

BY MANJULA | JUN 17, 2018 9:49 PM #NAYANTHARA #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS