இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், தேவைப்படும் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஒவ்வொரு மாதத்தின் நான்காவது சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நாளை இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளையும், நாளை மறுநாளும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும்.

 

மேலும் வரும் 30ஆம் தேதி புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

BY MANJULA | APR 27, 2018 1:39 PM #BANK #HOLIDAY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS