ATM-ல் தினம், பணம் நிரப்பும் சாக்கில் ரூ.60 லட்சம் வரை கையாடல் செய்த காசாளர்!

Home > தமிழ் news
By |
ATM-ல் தினம், பணம் நிரப்பும் சாக்கில் ரூ.60 லட்சம் வரை கையாடல் செய்த காசாளர்!

சென்னை போரூரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி செய்துள்ள  சுரேஷ் என்கிற காசாளர், மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்மந்தப்பட்ட கிளையின் இந்தியன் வங்கிக்கு உட்பட்ட ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் பணியினை கூடுதலாக வங்கியின் காசாளர் சுரேஷுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் போது தினந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சுரேஷ் கையாடல் செய்துள்ளார்.

 

சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் சிறிது சிறிதாக இந்த 3 ஆண்டுகளில் காசாளர் சுரேஷ் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளதை அடுத்து  கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

CRIME, FORGERY, ATM, CHENNAI, TAMILNADU, BANK