இந்தியாவின் பிரில்லியண்ட் பந்துவீச்சுக்கு முன் என்ன ஆகும் ஆஸி?.. கிரிக்கெட் வீரரின் வைரல் ட்வீட்!

Home > தமிழ் news
By |
இந்தியாவின் பிரில்லியண்ட் பந்துவீச்சுக்கு முன் என்ன ஆகும் ஆஸி?.. கிரிக்கெட் வீரரின் வைரல் ட்வீட்!

ஆஸ்திரேலியாவில் சுற்றிச் சுற்றி விளையாடும் இந்திய அணி பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அதன் பின் தற்போது மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுகளுக்கு பின் வென்று சாதனை படைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான், வெற்றிக்காக போராடுவதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை என்று இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியிருந்தார்.


இந்நிலையில், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய சுருண்டுதான் விழப்போகிறது, 3-1 என்கிற விகிதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறப் போகிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


முன்னதாக, ட்வீட் போட ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன், ‘இந்திய அனைத்து விதமாகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. 2-1 என்கிற அளவில் வெற்றி விகிதம் ஏற்கனவே இருப்பதால் சிட்னியில் நடக்கவிருக்கும் தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் போராடினால்தான் வேற்றால்தான், இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹர்பஜன் மேற்கண்டவாறு ரீ-ட்வீட் செய்துள்ளார்.

 

TEAMINDIA, AUSVIND, SYDNEYTEST, VIRATKOHLI, CRICKET, TWEET