கேப்டன்சியில் அஸ்வின் இன்னொரு தோனியா? என்ற கேள்விக்கு, கிங்ஸ் லெவன் அணியின் வீரர் ஆரோன் பிஞ்ச் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அஸ்வின் கேப்டனாக தனிச்சிறப்புடன் விளங்குகிறார். இதற்கு முன்பு அணித்தலைமையில் அனுபவமில்லாவிட்டாலும் வெற்றிகரமாகவே அவர் அணியை நடத்துகிறார்.

 

அஸ்வின் மிகவும் அமைதியாக கேப்டன்சி செய்கிறார், அது தோனியின் கீழ் ஆடியதால் அவருக்கு இந்தத் தன்மை வந்திருக்கலாம். அஸ்வினும், தோனி போலவே கூலாக இருக்கிறார், அவர் போலவே முக்கியத் தருணங்களில் சில முடிவுகளை எடுக்கிறார்,'' என தெரிவித்திருக்கிறார்.

 

ஐபிஎல்லில் இதுவரை அதிக அணிகளுக்காக ஆடிய வீரர்(7 அணிகள்) என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக, ஆரோன் பிஞ்ச் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS