'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட அபர்ணதிக்கு, அந்த நிகழ்ச்சியின் வாயிலாக எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.இந்த நிலையில், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் ஆர்யா தான் தனக்கு முதலில் முத்தம் கொடுத்ததாக அபர்ணதி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில், " இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முற்றிலும் வித்தியாசமானதொரு உணர்வாக இருந்தது. முதன்முதலில் ஆர்யா தான் எனக்கு முத்தம் கொடுத்தார். பிறகு நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன்.

 

அந்த நேரத்தில் நான் மிகவும் சோர்வாக இருந்தேன். ஆனால் குழப்பமான சூழ்நிலையில் என்னை எப்படிக் கையாள்வது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்,'' என்று தெரிவித்துள்ளார்.

 

அபர்ணதியின் முழுமையான பேட்டியைக் காண, கீழே உள்ள 'வீடியோ' லிங்கைக் கிளிக் செய்யவும்...

BY BEHINDWOODS NEWS BUREAU | MAY 18, 2018 7:20 PM #ARYA #ABARNATHI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS