ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பாலகொள்ளு தொகுதியின் எம்எல்ஏ-வாக, தெலுங்கு தேசம் கட்சியின் நிம்மல ராம ராயுடு பதவி வகித்து வருகிறார். இவரது தொகுதியில் நவீன மயானம் அமைப்பதற்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கி இருந்தார். ஆனால் பணிகள் மந்தமாகவே நடைபெற்றன.

 

இதற்கான காரணத்தை விசாரித்தபோது சுடுகாட்டில் பேய் இருக்கும் என்பதால் தங்களுக்கு பயமாக இருப்பதாக கட்டிடத் தொழிலாளர்கள் கூறினர்.இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பாக இரவில் சுடுகாட்டுக்கு சென்ற எம்எல்ஏ அங்கேயே சாப்பிட்டு இரவு கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார்.

 

இதைக்கண்ட கட்டிடத் தொழிலாளர்கள் தங்களது அச்சம் நீங்கி விட்டதாகக் கூறி, மயானப்பணிகளை விரைவில் முடித்துத் தருவதாக தெரிவித்திருக்கின்றனர்.  

BY MANJULA | JUN 25, 2018 12:05 PM #ANDHRA #MLA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS