'இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை'.. காரணம் என்ன?

Home > தமிழ் news
By |
'இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை'.. காரணம் என்ன?

இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம், திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அகோரியின் ஆட்டம், எக்ஸ் வீடியோஸ் படங்களில் நடித்த நடிகை ரியாமிகா(26), சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

எதனால் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஈரோட்டைச் சேர்ந்த ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் தனது சகோதரர் பிரகாஷ் என்பவருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SUICIDE, RIYAMIKKA