கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை காதலித்து மணம் புரிந்த நடிகை ரம்பாவுக்கு, ஏற்கனவே லன்யா, சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விரைவில் தான் 3-வது குழந்தைக்கு அம்மாவாக இருப்பதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், " இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் உலகம் முழுவதும் இருக்கும் எனது அன்பாவனர்களுக்கு நான் 3-வது குழந்தைக்கு தாயாகியுள்ள தகவலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தைகளே இல்லை. எனக்காகவும், என்னுடைய குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

 

BY BEHINDWOODS NEWS BUREAU | MAY 23, 2018 8:05 PM #RAMBHA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS