96 BNS Banner
Ratsasan BNS Banner

'என்னை இரும்புக்கம்பிகளால் தாக்கினர்'.. நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி புகார்!

Home > தமிழ் news
By |
'என்னை இரும்புக்கம்பிகளால் தாக்கினர்'.. நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி புகார்!

குடும்பத் தகராறில் தன்னை இரும்புக்கம்பியால் தாக்கியதாக, நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான,மன்சூர் அலிகான் சமீபகாலமாக பொதுப்பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.இந்தநிலையில் அவரது 3-வது,மனைவி வஹிதா காவல் நிலையத்தில் தன் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.

 

 இதுகுறித்து அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ''தன்மீது தாக்குதல் நடந்தபோது மன்சூர் அலிகான் வேடிக்கை பார்த்ததாகவும், அவரது மனைவி ஹமீதா, மகள் லைலா அலிகான் மற்றும் மகன் மீரான் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மன்சூர் அலிகானின் 2-வது மனைவியின் வாரிசுகளான லைலா அலிகான், மீரான் அலிகான் ஆகியோர் இரும்புக்கம்பிகளால் வஹிதாவைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

POLICE, MANSOORALIKHAN