நேற்று பிற்பகல் தூத்துக்குடி பிரைன் நகரில் போலீஸ்-ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு காளியப்பன்(22) என்ற வாலிபர் பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இந்த நிலையில் இறந்த காளியப்பனின் மரணம் தன்னை நிலைகுலைய வைத்துள்ளதாக, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "துப்பாக்கி சூட்டில்  என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

இறந்த காளியப்பன் உடலைப் பார்த்து நடிக்காதே எந்திரி என, போலீசார் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS